தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டு நிறைவடைந்ததை ஒட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற தூய்மை பணியில், மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் மற்றும் மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன்சிங் ஆகியோர் பங்கேற்றனர்.
மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற தூய்மை பணியில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குஜராத் மாநிலம் போர்பந்தரில் உள்ள சுதாமா கோயில் வளாகத்தில் அம்மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல் தூய்மை பணியில் ஈடுபட்டார்.
உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் காந்தி ஜெயந்தியை ஒட்டி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நடைபெற்ற சுத்தம் செய்யும் பணியில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார்.
தூய்மை இந்தியா திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்தை ஒட்டி நாட்டின் சுகாதார அணுகுமுறையை மாற்றிய திட்டம் என வீடியோ வெளியிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.