உயர்கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவ் உள்ளிட்ட 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக உயர்கல்வித் துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் ஐஏஎஸ், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உயர்கல்வித் துறை செயலாளராக கோபாலும், மின்வாரியத் தலைவராக இருந்த ராஜேஷ் லக்கானி, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியாக உள்ள சத்யபிரதா சாஹூக்கு, விலங்குகள், கால்நடை மற்றும் மீன்வளத் துறைச் செயலராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மின்வாரியத் துறைத் தலைவராக நந்தகுமாரும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையராக இருந்த சுந்தரவல்லி, கல்லூரி கல்வித் துறை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.