லெபனான் மீதான போரை நிறுத்துமாறு அமெரிக்காவும் பிரான்ஸும் விடுத்த வேண்டுகோளை ஏற்க இஸ்ரேல் மறுத்துவிட்டதாக ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.
நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றிய அவர், மத்திய கிழக்கில் பற்றி எரிந்த தீ, நரகமாக மாறிவிட்டதாக லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் குறிப்பிட்டு பேசினா்.
பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் நோக்கில் பிற நாடுகளின் ஆதரவுடன் அமெரிக்காவும் பிரான்ஸும் போர் நிறுத்தத்தை பிரகடனப்படுத்துமாறு இஸ்ரேலுக்கு விடுத்த வேண்டுகோளை அந்நாடு ஏற்றுக்கொள்ளவில்லை என ஐ.நா. பொதுச் செலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வேதனை தெரிவித்தார்.
அத்துடன் போரை முடிவுக்குக் கொண்டுவர ஐ.நா. அமைதிப் படை மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை என்று கூறிய அவர், தொடர்ந்து அமைதிப்படை அதன் பங்களிப்பை வழங்கும் என கூறினார்.