இஸ்ரேலை மிரட்டிய ஈரான் : நவீன ரேடாரால் கண்டுபிடிக்க முடியாத Fattah-2 ஏவுகணை - சிறப்பு கட்டுரை!
Aug 20, 2025, 03:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேலை மிரட்டிய ஈரான் : நவீன ரேடாரால் கண்டுபிடிக்க முடியாத Fattah-2 ஏவுகணை – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Oct 3, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய கிழக்கில் இஸ்ரேல் தாக்க முடியாத இடம் எதுவும் இல்லை என்று நெதன்யாகு, ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த மறுநாளே, இஸ்ரேல் மீது அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான். சரமாரியாக, 180க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி இஸ்ரேலை தாக்கிய ஈரான், இந்த தாக்குதலுக்குப் பயன்படுத்திய Fattah-2 ஹைப்பர்சோனிக் ஏவுகணையைப் பற்றி பார்க்கலாம்.

Center for Strategic and International Studies நிறுவனம், 2021ம் ஆண்டு, ஏவுகணை அச்சுறுத்தல் என்று ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில்,ஈரானிடம் ஏற்கெனவே, ஆயிரக்கணக்கான பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள் உள்ளன என்று கூறப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து, அமெரிக்க விமானப்படை ஜெனரல் கென்னத் மெக்கென்சி 2023 இல் ஈரானிடம் “3,000 க்கும் மேற்பட்ட” பாலிஸ்டிக் ஏவுகணைகள் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தான்,இஸ்ரேல் மீதான தாக்குதலில், முதன்முறையாக Fattah-2 ஹைப்பர்சோனிக் ஏவுகணையைப் பயன்படுத்தி இருக்கிறது ஈரான். நிர்ணயித்த இலக்குகளில் 90 சதவீத இலக்குகளை Fattah-2 ஏவுகணைகள் தாக்கியதாக ஈரான் தெரிவித்துள்ளது.

1,500 கிலோமீட்டர் தூரம் வரை செல்லக்கூடியதாகவும், தன் இலக்கைத் தாக்கும் முன் வினாடிக்கு 5.1 கிலோ மீட்டர் வேகத்தை எட்டக் கூடியதாகவும் இந்த ஏவுகணை உள்ளது. இந்த ஏவுகணையில், ஹைப்பர்சோனிக் க்ளைடு வெஹிக்கிள் (HGV) பொருத்தப்பட்டுள்ளது. ஹைப்பர்சோனிக் ஏவுகணை தோராயமாக மணிக்கு 6,100 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாகும்.

எதிரிகளின் தாக்குதலைத் தவிர்ப்பதற்காக பறக்கும் போதே, தனது பாதையை மாற்றி சென்று குறிப்பிட்ட இலக்கைத் தாக்கும் திறன் கொண்டதாகும். மேம்பட்ட திசைக் கட்டுப்பாட்டுக்காக நகரக்கூடிய முனையுடன் கூடிய கோள வடிவிலான திட எரிபொருள் இயந்திரத்தை இந்த Fattah-2 பயன்படுத்துகிறது.

இந்த ஏவுகணையில் உள்ள, ரீ-என்ட்ரி வாகனம் வளிமண்டலத்தில் முடுக்கம் மற்றும் சூழ்ச்சிக்கு ஹைட்ராசைன் எரிபொருளைக் கொண்டுள்ளது. Fattah-2 ஏவுகணையைப் பூமியின் வளிமண்டலத்திற்கு வெளியேயும் செல்ல வைக்க முடியும். மேலும், ஏரோடைனமிக் கட்டுப்பாட்டின் மூலம் Fattah-2 ஏவுகணையை மீண்டும் வளிமண்டலத்திற்குள் திசைதிருப்பி செலுத்த முடியும்.

நவீன ரேடார் அமைப்புகளால் கூட Fattah-2 ஏவுகணையைக் கண்டறிய முடியாத, இந்த Fattah-2 ஏவுகணையை அதிநவீன பாதுகாப்புத் தொழில்நுட்பங்களாலும் இடைமறிப்பது சவாலான காரியமாகும் என்கிறார்கள்.

இதுவரை, ரஷ்யாவும் சீனாவும் அதிக எண்ணிக்கையில் பலவகையான ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை வைத்துள்ளன. இதில், ரஷ்யா மட்டுமே அவற்றைப் போரில் பயன்படுத்தியதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவைப் பொறுத்தவரை, இன்னமும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை நிலையில் தான் உள்ளது.

இந்த சூழலில் தான் ஈரான்,Fattah-2 ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை போரில் பயன்படுத்தியுள்ளது.
ஈரான் அனுப்பிய 180க்கும் மேற்பட்ட ஏவுகணைகளில், பெரும்பாலானவற்றை இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஜோர்டான் நாடுகளால் இயக்கப்படும் ஏவுகணை எதிர்ப்பு மற்றும் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளால் இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags: Fattah-2IsraelLebanonIranMiddle East.Netanyahu
ShareTweetSendShare
Previous Post

கனல் கண்ணன் மீதான வழக்கு ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

வடிவேலு தொடர்ந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் – உயர் நீதிமன்றத்தில் சிங்கமுத்து தரப்பு பதில் மனு தாக்கல்!

Related News

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

Load More

அண்மைச் செய்திகள்

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

உக்ரைன் – அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு : டொனெட்ஸ்க்கில் FAB-500 ரக குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies