சமந்தா விவாகரத்து விவகாரம் - தெலங்கானா அமைச்சர் கருத்துக்கு நாகர்ஜூனா கண்டனம்!
Jan 14, 2026, 09:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சமந்தா விவாகரத்து விவகாரம் – தெலங்கானா அமைச்சர் கருத்துக்கு நாகர்ஜூனா கண்டனம்!

Murugesan M by Murugesan M
Oct 3, 2024, 10:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகை சமந்தா விவாகரத்து விவகாரம் தொடர்பாக தெலங்கானா அமைச்சர் கோண்டா சுரேகா தெரிவித்த கருத்துக்கு நடிகர் நாகர்ஜூனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தா, சில காரணங்களால் விவாகரத்து பெற்று பிரிந்தார். கருத்து வேறுபாடால் பிரிவதாக அறிவித்தாலும், சரியான காரணத்தை இருவரும் வெளிப்படையாக கூறாத நிலையில், சமந்தா-நாக சைதன்யா விவகாரத்து தொடர்பாக தெலங்கான அமைச்சர் கோண்டா சுரேகா சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார்.

இருவரின் விவகாரத்துக்கு தெலங்கானாவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகன் கே.டி.ராமாராவ் தான் காரணம் என்றும், கே.டி.ராமாராவ் செய்த விஷயங்களால் பல நடிகைகள் திருமணம் செய்து கொண்டு தெலுங்கு சினிமாவை விட்டே போய்விட்டார்கள் எனவும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

தெலங்கானா அமைச்சர் சுரேகாவின் கருத்துக்கு நடிகர் நாகர்ஜூனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் திரை நட்சத்திரங்களின் வாழ்க்கையை யாரும் விமர்சிக்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார். பொறுப்பான பதவியில் பெண்ணாக இருக்கும் அமைச்சர், தங்கள் குடும்பத்திற்கு எதிராக தெரிவித்துள்ள கருத்துகள் அனைத்தும் பொருத்தமற்றவை, தவறானவை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சமந்தா – நாக சைதன்யா விவாகரத்து தொடர்பாக அமைச்சர் கோண்டா சுரேகா தெரிவித்துள்ள கருத்துகளை உடனடியாக அவர் திரும்ப பெற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். அமைச்சர் சுரேகாவின் கருத்துக்கு நடிகை சமந்தா மற்றும் நடிகர் நானி உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரும், நடிகருமான நாக சைதன்யா வெளியிட்டுள்ள பதிவில், விவகாரத்து தொடர்பாக பல்வேறு ஆதரமற்ற கிசுகிசுகள் வந்தபோதும் தமது குடும்பத்திற்காகவும், முன்னாள் மனைவியின் மீதான மரியாதை காரணமாக இதுவரை அமைதியாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

தற்போது விவகாரத்து தொடர்பாக தெலங்கானா அமைச்சர் சுரேகா தெரிவித்துள்ள கருத்து முற்றிலும் பொய்யானது, கேலிக்கூத்தானது என தெரிவித்துள்ளார். பெண்களின் ஆதரவு கொண்ட அமைச்சர், பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை முடிவுகளை ஊடகங்களின் தலைப்புச் செய்திகளுக்காக பயன்படுத்திக் கொள்வது வெட்கக்கேடானது என அவர் கூறியுள்ளார்.

Tags: Actor NagarjunaTelangana Minister Konda SurekaSamantha's divorce issue.KT Rama RaoNaga Chaitanya
ShareTweetSendShare
Previous Post

லெபனான் மீதான தாக்குதலை நிறுத்துமாறு கூறிய அமெரிக்காவின் வேண்டுகோளை இஸ்ரேல் ஏற்கவில்லை – ஐ.நா. பொதுச் செயலாளர் கவலை!

Next Post

விருகம்பாக்கத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் எல்.முருகன்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies