கள்ளக்குறிச்சி அருகே நடைபெற்ற விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில் அதே கட்சியை சேர்ந்த தொண்டர்கள் போதையில் ரகளை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
உளுந்தூர்பேட்டையில் விசிகவின் மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெற்றது. மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமானோரை வரவழைத்த நிலையில், போதுமான இருக்கை வசதிகள் ஏற்படுத்தி தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக மகளிருக்கான மாநாடு என கூறிய நிலையில், அதே கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் மற்றும் இளைஞர்கள் மது அருந்தி வந்து மகளிரை எழுப்பி விட்டு அடாவடி செய்தனர். இது தான் விசிகவின் மது ஒழிப்பு மாநாடா என பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.