தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் 14-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக வளாகத்தில், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் 14 ஆவது பட்டமளிப்பு விழா, நடைபெற்றது.
இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பல்கலைக்கழக துணைவேந்தர் சுந்தர், சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ அனிதா பால்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது 62 மாணவ, மாணவிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் பட்டங்களை வழங்கினார். விழாவில் மொத்தம் 3 ஆயிரத்து 638 மாணவ, மாணவியர்கள் பட்டம் பெற்றனர். மீதமுள்ள 3 ஆயிரத்து 576 பேருக்கு அஞ்சல் மூலம் பட்டம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.