திருப்பூர் குமரன் பிறந்த நாளில் அவரின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குவோம் என தமிழக பாஜக மாநில அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், “தேசியக் கொடியைக் காக்க, இளம் வயதிலேயே தமது இன்னுயிரைத் தியாகம் செய்த, திருப்பூர் கொடிகாத்த குமரன் அவர்கள் பிறந்த தினம் இன்று.
இளம் வயதிலேயே காந்தியக் கொள்கையில் ஈடுபாடு கொண்டு, தேச விடுதலைக்காகச் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். ஆங்கிலேய அரசின் காவல்துறையால் தடியடிக்கு உள்ளாகி, தனது 27 வயதிலேயே தேசத்திற்காக உயிர்த் தியாகம் செய்த, அமரர் திருப்பூர் குமரன் அவர்கள் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குவோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.