எஸ்சி, எஸ்டி உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பட்டியலின, பழங்குடியின பிரிவினருக்கு உள் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருப்பதாக உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அண்மையில் அளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து பலரும் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கல்வி, வேலைவாய்ப்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு உள் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருப்பதாக அரசியல் சாசன அமர்வு பிறப்பித்த உத்தரவில் எந்தத் தவறும் இல்லை என்று கூறி, சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.