கடும் பணிச்சுமையில் ஊழியர்கள், ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கவலை - சிறப்பு கட்டுரை!
Jan 14, 2026, 08:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடும் பணிச்சுமையில் ஊழியர்கள், ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கவலை – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Oct 5, 2024, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மிகப் பெரிய பிரஷர் குக்கரில் ஊழியர்கள் தள்ளப்படுகிறார்கள் என்றும், பணிஇடங்களில், மனித உணர்வை மதிக்கும் வகையிலான சிறந்த மாற்றத்துக்கு zoho நிறுவனர்ஸ்ரீதர் வேம்பு அழைப்பு விடுத்திருக்கிறார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பணியிட அழுத்தம் மற்றும் மனநலம் பற்றிய கவலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, மிக அதிகமான பணிச் சுமைகள் மற்றும் அழுத்தம் காரணமாக, சில பெரிய நிறுவனங்களின் ஊழியர்கள் மிக சிறிய வயதிலேயே உயிரிழக்கின்றனர்.

கடந்த சில மாதங்களில் மட்டும் இது போன்ற பல்வேறு சம்பவங்கள் தலைப்புச் செய்திகளாக இடம் பெற்றன. இதனால், அலுவலகப் பணி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டுக்கும் இடையே, உரிய சமநிலை மற்றும் பணியிடத்தில் மனநலம் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து மக்கள் பேசத் தொடங்கி இருக்கிறார்கள்

இந்நிலையில், Zoho நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு, நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை எவ்வாறு நடத்துகின்றன என்பதில் ஒரு அடிப்படை மாற்றம் தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

28 ஆண்டுகளாக தாம் வேலை செய்வதாகவும்,இன்னும் 28 ஆண்டுகள் வேலை செய்ய முடியும் என்று கூறிய ஸ்ரீதர் வேம்பு, தன்னால் முடியும் என்பதால், தனது ஊழியர்களை அப்படி வேலை செய்ய அனுமதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்

பெரிய நகரங்களில், ஊழியர்கள் எதிர்கொள்ளும் அழுத்தம் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ள ஸ்ரீதர் வேம்பு, சிறிய நகரங்களிலிருந்து பெரிய நகரங்களுக்கு வரும் ஊழியர்களுக்கு முதல் சவாலாக தனிமை இருப்பதாக கூறியுள்ளார். மேலும், பெரும் நகரங்களில் இரண்டு மணிநேரம் வரை நீடிக்கக்கூடிய பயணங்களை எதிர்கொள்ளும் ஊழியர்களுக்கு மன அழுத்தம் வராமல் இருப்பது தான் ஆச்சரியம் என்றும் கூறியுள்ளார்.

சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதன் மூலம், அந்தந்த நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை மன அழுத்தங்களில் இருந்து காப்பாற்ற முடியும் என்று தெரிவித்த ஸ்ரீதர் வேம்பு, இதனால் ஊழியர்கள் தங்கள் வீடுகள் மற்றும் சமூகங்களுக்கு நெருக்கமாக இருக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், வணிகத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தொழில்நுட்பத்தின் பங்கை சுட்டிக் காட்டிய ஸ்ரீதர் வேம்பு, பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் கடுமையான போட்டியில் கட்டுப்பாடு தேவை என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக டிஜிட்டல் தளங்களில், ஏகபோகங்களைத் தடுக்க வேண்டும் என்றும் ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்தியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு முன்முயற்சிகளைப் பாராட்டியுள்ள ஸ்ரீதர் வேம்பு, இந்தியாவின் ஒளிவிடும் வெற்றிக் கதை என்றும், மற்ற நாடுகளுக்கு டிஜிட்டல் இந்தியா ஒரு முன்மாதிரி என்றும் தெரிவித்துள்ளார்.

ஜோஹோவை இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாகக் கட்டியெழுப்பிய ஸ்ரீதர் வேம்புவின் வாதங்கள், ஆரோக்கியமான வேலை கலாச்சாரத்தை வலியுறுத்துகிறது .

Tags: better workplaceworkplace stressemployeesZoho founder Sreedee Vembu
ShareTweetSendShare
Previous Post

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு பணி – போலீசாருக்கு ரூ. 39 லட்சம் மதிப்பில் படகுகள்!

Next Post

பலவீனமான நிலையில் ஈரான்?இஸ்ரேலுக்கு எதிரான போரில் பேரழிவு உறுதி என அச்சம் – சிறப்பு கட்டுரை!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies