கடும் பணிச்சுமையில் ஊழியர்கள், ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கவலை - சிறப்பு கட்டுரை!
Oct 26, 2025, 02:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடும் பணிச்சுமையில் ஊழியர்கள், ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கவலை – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Oct 5, 2024, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மிகப் பெரிய பிரஷர் குக்கரில் ஊழியர்கள் தள்ளப்படுகிறார்கள் என்றும், பணிஇடங்களில், மனித உணர்வை மதிக்கும் வகையிலான சிறந்த மாற்றத்துக்கு zoho நிறுவனர்ஸ்ரீதர் வேம்பு அழைப்பு விடுத்திருக்கிறார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பணியிட அழுத்தம் மற்றும் மனநலம் பற்றிய கவலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, மிக அதிகமான பணிச் சுமைகள் மற்றும் அழுத்தம் காரணமாக, சில பெரிய நிறுவனங்களின் ஊழியர்கள் மிக சிறிய வயதிலேயே உயிரிழக்கின்றனர்.

கடந்த சில மாதங்களில் மட்டும் இது போன்ற பல்வேறு சம்பவங்கள் தலைப்புச் செய்திகளாக இடம் பெற்றன. இதனால், அலுவலகப் பணி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டுக்கும் இடையே, உரிய சமநிலை மற்றும் பணியிடத்தில் மனநலம் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து மக்கள் பேசத் தொடங்கி இருக்கிறார்கள்

இந்நிலையில், Zoho நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு, நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை எவ்வாறு நடத்துகின்றன என்பதில் ஒரு அடிப்படை மாற்றம் தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

28 ஆண்டுகளாக தாம் வேலை செய்வதாகவும்,இன்னும் 28 ஆண்டுகள் வேலை செய்ய முடியும் என்று கூறிய ஸ்ரீதர் வேம்பு, தன்னால் முடியும் என்பதால், தனது ஊழியர்களை அப்படி வேலை செய்ய அனுமதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்

பெரிய நகரங்களில், ஊழியர்கள் எதிர்கொள்ளும் அழுத்தம் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ள ஸ்ரீதர் வேம்பு, சிறிய நகரங்களிலிருந்து பெரிய நகரங்களுக்கு வரும் ஊழியர்களுக்கு முதல் சவாலாக தனிமை இருப்பதாக கூறியுள்ளார். மேலும், பெரும் நகரங்களில் இரண்டு மணிநேரம் வரை நீடிக்கக்கூடிய பயணங்களை எதிர்கொள்ளும் ஊழியர்களுக்கு மன அழுத்தம் வராமல் இருப்பது தான் ஆச்சரியம் என்றும் கூறியுள்ளார்.

சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதன் மூலம், அந்தந்த நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை மன அழுத்தங்களில் இருந்து காப்பாற்ற முடியும் என்று தெரிவித்த ஸ்ரீதர் வேம்பு, இதனால் ஊழியர்கள் தங்கள் வீடுகள் மற்றும் சமூகங்களுக்கு நெருக்கமாக இருக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், வணிகத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தொழில்நுட்பத்தின் பங்கை சுட்டிக் காட்டிய ஸ்ரீதர் வேம்பு, பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் கடுமையான போட்டியில் கட்டுப்பாடு தேவை என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக டிஜிட்டல் தளங்களில், ஏகபோகங்களைத் தடுக்க வேண்டும் என்றும் ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்தியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு முன்முயற்சிகளைப் பாராட்டியுள்ள ஸ்ரீதர் வேம்பு, இந்தியாவின் ஒளிவிடும் வெற்றிக் கதை என்றும், மற்ற நாடுகளுக்கு டிஜிட்டல் இந்தியா ஒரு முன்மாதிரி என்றும் தெரிவித்துள்ளார்.

ஜோஹோவை இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாகக் கட்டியெழுப்பிய ஸ்ரீதர் வேம்புவின் வாதங்கள், ஆரோக்கியமான வேலை கலாச்சாரத்தை வலியுறுத்துகிறது .

Tags: better workplaceworkplace stressemployeesZoho founder Sreedee Vembu
ShareTweetSendShare
Previous Post

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு பணி – போலீசாருக்கு ரூ. 39 லட்சம் மதிப்பில் படகுகள்!

Next Post

பலவீனமான நிலையில் ஈரான்?இஸ்ரேலுக்கு எதிரான போரில் பேரழிவு உறுதி என அச்சம் – சிறப்பு கட்டுரை!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies