கடும் பணிச்சுமையில் ஊழியர்கள், ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கவலை - சிறப்பு கட்டுரை!
Jul 29, 2026, 09:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடும் பணிச்சுமையில் ஊழியர்கள், ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கவலை – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Oct 5, 2024, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மிகப் பெரிய பிரஷர் குக்கரில் ஊழியர்கள் தள்ளப்படுகிறார்கள் என்றும், பணிஇடங்களில், மனித உணர்வை மதிக்கும் வகையிலான சிறந்த மாற்றத்துக்கு zoho நிறுவனர்ஸ்ரீதர் வேம்பு அழைப்பு விடுத்திருக்கிறார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பணியிட அழுத்தம் மற்றும் மனநலம் பற்றிய கவலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, மிக அதிகமான பணிச் சுமைகள் மற்றும் அழுத்தம் காரணமாக, சில பெரிய நிறுவனங்களின் ஊழியர்கள் மிக சிறிய வயதிலேயே உயிரிழக்கின்றனர்.

கடந்த சில மாதங்களில் மட்டும் இது போன்ற பல்வேறு சம்பவங்கள் தலைப்புச் செய்திகளாக இடம் பெற்றன. இதனால், அலுவலகப் பணி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டுக்கும் இடையே, உரிய சமநிலை மற்றும் பணியிடத்தில் மனநலம் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து மக்கள் பேசத் தொடங்கி இருக்கிறார்கள்

இந்நிலையில், Zoho நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு, நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை எவ்வாறு நடத்துகின்றன என்பதில் ஒரு அடிப்படை மாற்றம் தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

28 ஆண்டுகளாக தாம் வேலை செய்வதாகவும்,இன்னும் 28 ஆண்டுகள் வேலை செய்ய முடியும் என்று கூறிய ஸ்ரீதர் வேம்பு, தன்னால் முடியும் என்பதால், தனது ஊழியர்களை அப்படி வேலை செய்ய அனுமதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்

பெரிய நகரங்களில், ஊழியர்கள் எதிர்கொள்ளும் அழுத்தம் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ள ஸ்ரீதர் வேம்பு, சிறிய நகரங்களிலிருந்து பெரிய நகரங்களுக்கு வரும் ஊழியர்களுக்கு முதல் சவாலாக தனிமை இருப்பதாக கூறியுள்ளார். மேலும், பெரும் நகரங்களில் இரண்டு மணிநேரம் வரை நீடிக்கக்கூடிய பயணங்களை எதிர்கொள்ளும் ஊழியர்களுக்கு மன அழுத்தம் வராமல் இருப்பது தான் ஆச்சரியம் என்றும் கூறியுள்ளார்.

சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதன் மூலம், அந்தந்த நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை மன அழுத்தங்களில் இருந்து காப்பாற்ற முடியும் என்று தெரிவித்த ஸ்ரீதர் வேம்பு, இதனால் ஊழியர்கள் தங்கள் வீடுகள் மற்றும் சமூகங்களுக்கு நெருக்கமாக இருக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், வணிகத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தொழில்நுட்பத்தின் பங்கை சுட்டிக் காட்டிய ஸ்ரீதர் வேம்பு, பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் கடுமையான போட்டியில் கட்டுப்பாடு தேவை என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக டிஜிட்டல் தளங்களில், ஏகபோகங்களைத் தடுக்க வேண்டும் என்றும் ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்தியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு முன்முயற்சிகளைப் பாராட்டியுள்ள ஸ்ரீதர் வேம்பு, இந்தியாவின் ஒளிவிடும் வெற்றிக் கதை என்றும், மற்ற நாடுகளுக்கு டிஜிட்டல் இந்தியா ஒரு முன்மாதிரி என்றும் தெரிவித்துள்ளார்.

ஜோஹோவை இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாகக் கட்டியெழுப்பிய ஸ்ரீதர் வேம்புவின் வாதங்கள், ஆரோக்கியமான வேலை கலாச்சாரத்தை வலியுறுத்துகிறது .

Tags: better workplaceworkplace stressemployeesZoho founder Sreedee Vembu
ShareTweetSendShare
Previous Post

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு பணி – போலீசாருக்கு ரூ. 39 லட்சம் மதிப்பில் படகுகள்!

Next Post

பலவீனமான நிலையில் ஈரான்?இஸ்ரேலுக்கு எதிரான போரில் பேரழிவு உறுதி என அச்சம் – சிறப்பு கட்டுரை!

Related News

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies