தென்காசி மாவட்டத்தில் சரிவை சந்தித்து வரும் பிரம்பு பொருட்கள் தயாரிப்பு தொழில் - சிறப்பு கட்டுரை!
Mar 15, 2026, 09:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் சரிவை சந்தித்து வரும் பிரம்பு பொருட்கள் தயாரிப்பு தொழில் – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Oct 5, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசி மாவட்டத்தில் மிகவும் பிரபலமாக திகழ்ந்து வரும், பிரம்பு பொருட்கள் தயாரிக்கும் தொழில் சரிவை சந்தித்து வருகிறது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்…

என்னதான், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வந்தாலும், மூங்கில்களை கொண்டு உருவாக்கப்படும் பொருட்கள் மீதான ஈர்ப்பும், தேவையும் அதிகரித்தபடியேதான் உள்ளது. எவ்வித செயற்கை பொருட்களும் இல்லாமல் இயற்கையாக கிடைக்கும் மூங்கிலை மட்டுமே கொண்டு உருவாக்கப்படும் பிரம்பு பொருட்களை வாங்க ஏராளமான மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இத்தகைய பிரம்பு பொருட்களின் தயாரிப்புகளுக்கென்றே தனிப்பெயர் பெற்று விளங்குகிறது, தென்காசி மாவட்டத்தில் உள்ள தேன்பொத்தை, விஸ்வநாதபுரம் உள்ளிட்ட பகுதிகள். இங்குள்ள 500 மேற்பட்ட குடும்பங்கள் 80 ஆண்டுகளுக்கு மேலாக பிரம்பு பொருட்கள் தயாரிப்பு தொழிலில் கோலோச்சி வருகின்றன.

கட்டில்கள், மேஜைகள், நாற்காலிகள், அலங்கார கூடைகள் உள்ளிட்ட பல்வேறு பிரம்பு பொருட்கள் தயாரிக்கப்பட்டு, பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஆனால், இந்த பகுதிகளில் அண்மைக்காலமாக பல்வேறு கட்டுப்பாடுகளால் பிரம்பு பொருட்கள் தயாரிப்பு தொழில் நலிவை சந்தித்து வருகிறது. முன்பெல்லாம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள காடுகளில் இருந்து பிரம்புகளை எடுத்து வந்து, வீட்டு உபயோக பொருட்கள் உருவாக்கப்படும்.

ஆனால் , தற்போது காடுகளில் இருந்து மூங்கில் பிரம்புகளை வெட்ட வனத்துறை தடை விதித்துள்ளது. இதனால், அசாம் மாநிலத்தில் இருந்தும், மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்தும் மூங்கில்களை வரவழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மூங்கிலை இறக்குமதி செய்வதற்கே அதிக தொகை செலவாவதால், பிரம்பு பொருட்களின் விலையிலும் அது எதிரொலிக்கிறது…

தேன்பொத்தை, விஸ்வநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தயாராகும் பிரம்பு பொருட்கள் தரமானவையாகவும், பிரசித்தி பெற்றவையாக இருந்தாலும், அதிக விலைக்கு விற்கப்படுவதால் அவற்றை வாங்க பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனர்..

எனவே, வனத்துறை விதித்துள்ள தடையை நீக்கி இங்குள்ள காடுகளிலேயே பிரம்புகளை வெட்ட அரசு அனுமதி அளிக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர். இதன்மூலம் பிரம்பு பொருட்களின் விலை குறைந்து விற்பனை அதிகரிக்கும் என அவர்கள் கூறுகின்றனர். மூங்கில்களால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் வெறும் அலங்காரத்திற்கானவை மட்டுமல்ல, நமது ஆரோக்கியத்துடனும் தொடர்புடையவை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நியாயமான பிரம்பு பொருட்கள் தயாரிப்பாளர்களின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags: bamboo productsDhenpothi Viswanathapuramrattan productsenkasi district
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி செல்லும் திருக்குடை : பெரியபாளையத்தில் உற்சாக வரவேற்பு அளித்த பக்தர்கள்!

Next Post

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு பணி – போலீசாருக்கு ரூ. 39 லட்சம் மதிப்பில் படகுகள்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies