தென்காசி மாவட்டத்தில் சரிவை சந்தித்து வரும் பிரம்பு பொருட்கள் தயாரிப்பு தொழில் - சிறப்பு கட்டுரை!
Sep 13, 2026, 12:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் சரிவை சந்தித்து வரும் பிரம்பு பொருட்கள் தயாரிப்பு தொழில் – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Oct 5, 2024, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தென்காசி மாவட்டத்தில் மிகவும் பிரபலமாக திகழ்ந்து வரும், பிரம்பு பொருட்கள் தயாரிக்கும் தொழில் சரிவை சந்தித்து வருகிறது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்…

என்னதான், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வந்தாலும், மூங்கில்களை கொண்டு உருவாக்கப்படும் பொருட்கள் மீதான ஈர்ப்பும், தேவையும் அதிகரித்தபடியேதான் உள்ளது. எவ்வித செயற்கை பொருட்களும் இல்லாமல் இயற்கையாக கிடைக்கும் மூங்கிலை மட்டுமே கொண்டு உருவாக்கப்படும் பிரம்பு பொருட்களை வாங்க ஏராளமான மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இத்தகைய பிரம்பு பொருட்களின் தயாரிப்புகளுக்கென்றே தனிப்பெயர் பெற்று விளங்குகிறது, தென்காசி மாவட்டத்தில் உள்ள தேன்பொத்தை, விஸ்வநாதபுரம் உள்ளிட்ட பகுதிகள். இங்குள்ள 500 மேற்பட்ட குடும்பங்கள் 80 ஆண்டுகளுக்கு மேலாக பிரம்பு பொருட்கள் தயாரிப்பு தொழிலில் கோலோச்சி வருகின்றன.

கட்டில்கள், மேஜைகள், நாற்காலிகள், அலங்கார கூடைகள் உள்ளிட்ட பல்வேறு பிரம்பு பொருட்கள் தயாரிக்கப்பட்டு, பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஆனால், இந்த பகுதிகளில் அண்மைக்காலமாக பல்வேறு கட்டுப்பாடுகளால் பிரம்பு பொருட்கள் தயாரிப்பு தொழில் நலிவை சந்தித்து வருகிறது. முன்பெல்லாம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள காடுகளில் இருந்து பிரம்புகளை எடுத்து வந்து, வீட்டு உபயோக பொருட்கள் உருவாக்கப்படும்.

ஆனால் , தற்போது காடுகளில் இருந்து மூங்கில் பிரம்புகளை வெட்ட வனத்துறை தடை விதித்துள்ளது. இதனால், அசாம் மாநிலத்தில் இருந்தும், மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்தும் மூங்கில்களை வரவழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மூங்கிலை இறக்குமதி செய்வதற்கே அதிக தொகை செலவாவதால், பிரம்பு பொருட்களின் விலையிலும் அது எதிரொலிக்கிறது…

தேன்பொத்தை, விஸ்வநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தயாராகும் பிரம்பு பொருட்கள் தரமானவையாகவும், பிரசித்தி பெற்றவையாக இருந்தாலும், அதிக விலைக்கு விற்கப்படுவதால் அவற்றை வாங்க பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனர்..

எனவே, வனத்துறை விதித்துள்ள தடையை நீக்கி இங்குள்ள காடுகளிலேயே பிரம்புகளை வெட்ட அரசு அனுமதி அளிக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர். இதன்மூலம் பிரம்பு பொருட்களின் விலை குறைந்து விற்பனை அதிகரிக்கும் என அவர்கள் கூறுகின்றனர். மூங்கில்களால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் வெறும் அலங்காரத்திற்கானவை மட்டுமல்ல, நமது ஆரோக்கியத்துடனும் தொடர்புடையவை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நியாயமான பிரம்பு பொருட்கள் தயாரிப்பாளர்களின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags: rattan productsenkasi districtbamboo productsDhenpothi Viswanathapuram
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பதி செல்லும் திருக்குடை : பெரியபாளையத்தில் உற்சாக வரவேற்பு அளித்த பக்தர்கள்!

Next Post

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு பணி – போலீசாருக்கு ரூ. 39 லட்சம் மதிப்பில் படகுகள்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies