தென்காசி மாவட்டத்தில் சரிவை சந்தித்து வரும் பிரம்பு பொருட்கள் தயாரிப்பு தொழில் - சிறப்பு கட்டுரை!
Jul 29, 2026, 09:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் சரிவை சந்தித்து வரும் பிரம்பு பொருட்கள் தயாரிப்பு தொழில் – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Oct 5, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசி மாவட்டத்தில் மிகவும் பிரபலமாக திகழ்ந்து வரும், பிரம்பு பொருட்கள் தயாரிக்கும் தொழில் சரிவை சந்தித்து வருகிறது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்…

என்னதான், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வந்தாலும், மூங்கில்களை கொண்டு உருவாக்கப்படும் பொருட்கள் மீதான ஈர்ப்பும், தேவையும் அதிகரித்தபடியேதான் உள்ளது. எவ்வித செயற்கை பொருட்களும் இல்லாமல் இயற்கையாக கிடைக்கும் மூங்கிலை மட்டுமே கொண்டு உருவாக்கப்படும் பிரம்பு பொருட்களை வாங்க ஏராளமான மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இத்தகைய பிரம்பு பொருட்களின் தயாரிப்புகளுக்கென்றே தனிப்பெயர் பெற்று விளங்குகிறது, தென்காசி மாவட்டத்தில் உள்ள தேன்பொத்தை, விஸ்வநாதபுரம் உள்ளிட்ட பகுதிகள். இங்குள்ள 500 மேற்பட்ட குடும்பங்கள் 80 ஆண்டுகளுக்கு மேலாக பிரம்பு பொருட்கள் தயாரிப்பு தொழிலில் கோலோச்சி வருகின்றன.

கட்டில்கள், மேஜைகள், நாற்காலிகள், அலங்கார கூடைகள் உள்ளிட்ட பல்வேறு பிரம்பு பொருட்கள் தயாரிக்கப்பட்டு, பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஆனால், இந்த பகுதிகளில் அண்மைக்காலமாக பல்வேறு கட்டுப்பாடுகளால் பிரம்பு பொருட்கள் தயாரிப்பு தொழில் நலிவை சந்தித்து வருகிறது. முன்பெல்லாம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள காடுகளில் இருந்து பிரம்புகளை எடுத்து வந்து, வீட்டு உபயோக பொருட்கள் உருவாக்கப்படும்.

ஆனால் , தற்போது காடுகளில் இருந்து மூங்கில் பிரம்புகளை வெட்ட வனத்துறை தடை விதித்துள்ளது. இதனால், அசாம் மாநிலத்தில் இருந்தும், மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்தும் மூங்கில்களை வரவழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மூங்கிலை இறக்குமதி செய்வதற்கே அதிக தொகை செலவாவதால், பிரம்பு பொருட்களின் விலையிலும் அது எதிரொலிக்கிறது…

தேன்பொத்தை, விஸ்வநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தயாராகும் பிரம்பு பொருட்கள் தரமானவையாகவும், பிரசித்தி பெற்றவையாக இருந்தாலும், அதிக விலைக்கு விற்கப்படுவதால் அவற்றை வாங்க பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனர்..

எனவே, வனத்துறை விதித்துள்ள தடையை நீக்கி இங்குள்ள காடுகளிலேயே பிரம்புகளை வெட்ட அரசு அனுமதி அளிக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர். இதன்மூலம் பிரம்பு பொருட்களின் விலை குறைந்து விற்பனை அதிகரிக்கும் என அவர்கள் கூறுகின்றனர். மூங்கில்களால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் வெறும் அலங்காரத்திற்கானவை மட்டுமல்ல, நமது ஆரோக்கியத்துடனும் தொடர்புடையவை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நியாயமான பிரம்பு பொருட்கள் தயாரிப்பாளர்களின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags: Dhenpothi Viswanathapuramrattan productsenkasi districtbamboo products
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி செல்லும் திருக்குடை : பெரியபாளையத்தில் உற்சாக வரவேற்பு அளித்த பக்தர்கள்!

Next Post

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு பணி – போலீசாருக்கு ரூ. 39 லட்சம் மதிப்பில் படகுகள்!

Related News

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies