ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய VSHORADS ஏவுகணை சோதனை பொக்ரானில் நடைபெற்றது. தரையிலிருந்து விண்ணை நோக்கி சீறிப் பாய்ந்த ஏவுகணை, குறிப்பிட்ட இலக்கை வெற்றிகரமாக அடைந்ததாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.
இதையொட்டி டிஆர்டிஓ அதிகாரிகள் மற்றும் ராணுவத்துக்குப் பாராட்டு தெரிவித்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், வான்வழி அச்சுறுத்தலுக்கு எதிராக தீரத்துடன் போரிட ராணுவத்துக்கு இந்த ஏவுகணை கூடுதல் பலம் சேர்க்கும் என தெரிவித்துள்ளார்.