லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்து ஏராளமானோர் உயிரிழந்ததையடுத்து, அவற்றை விமானத்தில் எடுத்துச் செல்ல எமிரேட்ஸ் விமானங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
லெபனானில் பேஜர், வாக்கி டாக்கிகளில் வெடிபொருளை மறைத்து இஸ்ரேல் நடத்திய நூதன தாக்குதலில் 37 பேர் உயிரிழந்தனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதைத்தொடர்ந்து எமிரேட்ஸ் விமானங்களில் பேஜர், வாக்கி டாக்கி எடுத்துச் செல்ல தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அவற்றை எடுத்து சென்றால் பறிமுதல் செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எமிரேட்ஸ் விமான நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவுவதால், அங்கு விமான சேவையை தற்காலிகமாக ரத்து செய்வதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.