செம்மொழி அந்தஸ்து பெறுவதற்கான முக்கிய விதியை மத்திய அரசு நீக்கியுள்ளது.
மொழியின் இலக்கிய மரபு தொடக்கத்திலிருந்தே அம்மொழிக்கு உரிமையானதாகவும், மற்ற மொழிகளின் இலக்கிய மரபுகளிலிருந்து பெறப்பட்டதாக இருக்கக் கூடாது என்ற முக்கிய விதியை மத்திய அரசு தற்போது நீக்கியுள்ளது.
நேற்று முன்தினம், மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகள் செம்மொழிகளாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில் இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.