லெபனானில் இருந்து வந்த ஏவுகணையை இஸ்ரேல் இடைமறித்து தடுத்ததில் வீடுகள் சேதமடைந்தன.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் விமானப்படை கடந்த 27-ம் தேதி நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்ததை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையிலான போர் தீவிரமடைந்தது.
இஸ்ரேல் விமானப் படை நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகாம்கள் அழிக்கப்பட்டு, 440 ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் தரைமட்டமாகின.
இதனிடையே, இருதரப்பு இடையேயான போர் தொடங்கி முதலாம் ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் இஸ்ரேல் மீதான லெபனான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. வடக்கு பகுதியில் நடத்தப்பட்டதை தாக்குதலை சாதுர்யமாக இஸ்ரேல் இடைமறித்து தடுத்ததில் வீடு சேதமடைந்தது.
இதனை தொடர்ந்து, மத்திய லெபனான் மாகாணத்தின் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்துள்ளது. நள்ளிரவு முதல் தாக்குதல் நீடித்து வருவதால் பல்வேறு பகுதிகள் தரைமட்டமாகின.