இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை இரு தரப்பிலும் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
பாலஸ்தீன ஆதரவு ஆயுத குழுவான ஹமாஸ், கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி, இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. சுமார் 20 நிமிடங்களில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான ஏவுகணைகளை ஏவி நடத்தப்பட்ட தாக்குதலில், ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.
மேலும், ஆயிரத்து 200-க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் படையினர் சிறைபிடித்து சென்றனர். ஹமாசின் இந்த திடீர் தாக்குதலால் பெரும் அதிர்ச்சியும், கோபமும் அடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து, காசா பகுதியில் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடையும் நிலையில், சுமார் 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். போரில் உறவுகளையும், உடமைகளையும் இழந்த மக்கள், நாட்டில் எப்போது அமைதி திரும்பும் என ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.