கராச்சி விமான நிலையம் அருகே ஏற்பட்ட வெடிவிபத்தில் சீன நாட்டை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே நள்ளிரவு வெடிவிபத்து நிகழ்ந்தது. இதில் சீன நாட்டைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தாக காவல்துறை தெரிவித்துள்ளது. விமான நிலையம் அருகே ஏற்பட்ட வெடிவிபத்தில் 10க்கும் மேற்பட்ட படுகாயமடைந்த நிலையில், பல வாகனங்களும் தீயில் எரிந்து சேதமடைந்தன. இந்த வெடிவிபத்தில் தீவிரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, பாகிஸ்தானில் உள்ள சீன துணை தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கராச்சி விமான நிலையம் அருகே நிகழ்ந்த வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சீன தூதரகம் அவசர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள பாகிஸ்தான் அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தானில் உள்ள சீன மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு சீன துணை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.