நீலகிரி மாவட்டம் வாழைத்தோட்டம் கிராமத்தில் இரவில் உலா வரும் காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மசினக்குடி, வாழைத்தோட்டம், மாயார் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், வாழைத்தோட்டம் பகுதியில் உலா வரும் காட்டு யானையால் அச்சமடைந்துள்ள கிராம மக்கள், வனத்துறை விரைந்து செயல்பட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.