இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக 2026ம் ஆண்டு வரை சனத் ஜெயசூர்யா தொடர்வார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியில் இடைக்கால பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யா நியமிக்கப்பட்டிருந்தார்.
இவர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் இலங்கை அணி வெற்றிபெற்றது. மேலும், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் இலங்கை அணி முழுமையாக கைப்பற்றியது.
இதனிடையே சனத் ஜெயசூர்யாவின் பதவிக்காலம் அக்டோபர் 1ம் தேதியுடன் முடிவு பெற்றது. இந்நிலையில், ஜெயசூர்யாவே இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக 2026ம் ஆண்டு வரை தொடர்வார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.