சங்கரன்கோவிலில் போதை பொருள் விழிப்பணர்வு பேரணியை ஏற்பாடு செய்த தமிழக பாஜக ஸ்டார்ட்அப் செல் தலைவர் அனந்த்அய்யாசாமி, voice of tenkasi, ராஜபாளையம் ரோட்டரி சங்கத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், மாநிலம் போதைப்பொருளின் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தின் கிராமங்களில் கூட போதைப்பொருள் புழக்கம் கடுமையாக அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். சரியான நேரத்தில் இந்த விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 40 மாதங்களாக ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பிரதிபலிக்கும் இந்த பேரணிக்கு தென்காசி மாவட்ட மக்கள் அதிக அளவில் வந்திருந்ததாகவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.