மகளிர் டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
ஒன்பதாவது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அன்னரி டெர்க்சன் மற்றும் சுனே லூஸ் ஜோடி ரன்களை கணிசமாக உயர்த்தியது. நிலைத்து நின்று ஆடிய லாரா வோல்வார்ட் 42 ரன்கள் எடுத்தார். நிர்ணயிக்கப்ட்ட 20 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்தது.
125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணி வீராங்கனைகளின் அதிரடியான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 19 புள்ளி 2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.