ஹிஸ்புல்லாவும், சுரங்கப் பாதையும்... விடாமல் வேட்டையாடும் இஸ்ரேல் - சிறப்பு கட்டுரை!
Jan 14, 2026, 12:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹிஸ்புல்லாவும், சுரங்கப் பாதையும்… விடாமல் வேட்டையாடும் இஸ்ரேல் – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Oct 8, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வான்வழி தாக்குதலை நடத்திய இஸ்ரேல் ,லெபனான் மீது தரை வழி தாக்குதலையும் தொடங்கி உள்ளது. காசாவில் ஹமாஸ் தீவிரவாதிகள் கட்டமைத்து வைத்திருந்ததைப் போலவே, லெபனானில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் ஏகப்பட்ட சுரங்கங்களை கட்டமைத்துள்ளனர். ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் சுரங்கங்களை கட்ட வடகொரியா உதவி செய்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி, லெபனானுக்குள் படையெடுத்து சென்ற இஸ்ரேல் இராணுவம், ஹிஸ்புல்லாவின் ரகசிய சுரங்கப்பாதைகளைக் கண்டு பிடித்திருக்கிறது. தெற்கு லெபனானில் உள்ள Ayta ash Shab என்று சிறிய கிராமத்தில், 12 க்கும் மேற்பட்ட நிலத்தடி சுரங்கங்களை இஸ்ரேல் இராணுவம் அழித்திருக்கிறது.

சுமார் 80 அடி ஆழமான ஹிஸ்புல்லாவின் இந்த சுரங்கங்கள் பலநூறு கிலோமீட்டர் தூரம் கொண்டவையாகும். இந்த சுரங்கத்தில், ராணுவக் கட்டுப்பாட்டு அறைகள், ஆயுதங்கள், ராக்கெட் லாஞ்சர்கள், ஏவுகணைகளை வீசுவதற்குப் பயன்படுத்தப்படும் தளவாடங்கள் மற்றும் வெடிமருந்து சேமிப்புக் கிடங்குகள் ஆகியவை உள்ளன.

ஹமாஸ் கட்டியுள்ள சுரங்கப் பாதைகள், 186 மைல்கள் வரை நீளமும், 50 முதல் 200 அடி வரை ஆழமும் கொண்டவையாகும். சராசரியாக ஒவ்வொரு சுரங்கப்பாதையும் 6 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்டதாகும்.

2020 ஆம் ஆண்டிலேயே 230 அடி ஆழத்தில் உள்ள ஒரு சுரங்கப் பாதையை இஸ்ரேல் இராணுவம் கண்டுபிடித்தது. சராசரி ஒரு சுரங்கப்பாதை கட்டுவதற்கு 350 டிரக் கட்டுமான பொருட்கள் தேவை என்று கூறப் படுகிறது. இதனை கொண்டு 86 வீடுகள்,7 மசூதிகள்,6 பள்ளிகள்,19 மருத்துவமனைகள் கட்ட முடியும் என்று கூறப்படுகிறது.

இந்த சுரங்கப் பாதைகளில் மின்சாரம் மற்றும் காற்றோட்டம் வசதி உள்ளது. குளிர்சாதன பெட்டிகள் மற்றும் சமையலறையுடன் படுக்கை அறைகளும் உள்ளன. இவை அனைத்தும் நீண்ட காலத்துக்கு இந்த சுரங்கப் பாதைகளில், நிலத்தடியில் தங்குவதற்கு உதவுகின்றன.

ஹமாஸை விட ஹிஸ்புல்லா மிக நீளமான மற்றும் அதிக ஆழமான சுரங்கப் பாதைகளை கட்டியுள்ளனர். ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டு, அவற்றில் பல இஸ்ரேல் நகரங்களுடன் தொடர்பு கொண்டதாக இருக்கின்றன.

லண்டனின் நிலத்தடி இரயில்வே பாதையை விட மிக நீளமான ஹிஸ்புல்லாவின் சுரங்கப் பாதைகள்,தென் கொரியாவுக்கு வட கொரியா போட்ட சுரங்கப் பாதையை நினைவூட்டுகின்றன. வட கொரிய இராணுவ அதிகாரிகள், ஹிஸ்புல்லா தலைவர்களைச் சந்தித்ததாக இஸ்ரேலின் Reichman பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் Dr Daphne Richemond-Barak தெரிவித்திருக்கிறார்.

நிலத்தடியில் ஆழமான சுரங்கங்களைக் கட்டும் கலையை ஈரானிடம் இருந்தே ஹிஸ்புல்லா கற்றுக் கொண்டதாக தெரிகிறது. அணு சக்தி நிலையங்களை இரகசிய சுரங்கங்களில் ஈரான் செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. I

SIS தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதி ஒரு சுரங்கப்பாதையில் சுட்டுக் கொல்லப்பட்டார்; சதாம் உசேன் சுரங்கம் ஒன்றிலிருந்து சிறை பிடிக்கப் பட்டார். அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பலமுறை சுரங்கப்பாதைகளைப் பயன்படுத்தி அமெரிக்காவின் பிடியிலிருந்து தப்பி இருக்கிறார்.

காசாவில் ஹமாஸ் உருவாக்கி வைத்துள்ள நிலத்தடி சுரங்கப் பாதைகளை அழித்து வரும் இஸ்ரேல் , லெபனானிலும் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் சுரங்கப் பாதைகளை அழிக்கத் தொடங்கி உள்ளது.

கடந்த மாதம் ,லெபனான் தலைநகர்,பெய்ரூட்டில் 65 அடி ஆழத்தில் உள்ள சுரங்கப் பாதையின் பதுங்கு அறையில் இருந்த ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா இஸ்ரேல் வான் வழி தாக்குதலில் கொல்லப்பட்டார். இதன் மூலம், எத்தனை ஆழத்தில், ஒளிந்து கொண்டாலும், விடப் போவதில்லை என்று ஹிஸ்புல்லா மற்றும் ஈரானுக்கு உரக்க சொல்லி இருக்கிறது.

Tags: LebanonIranAir Strikemissile attack
ShareTweetSendShare
Previous Post

ஹரியானா தேர்தல் வெற்றிக்கு பிரதமர் மோடியே காரணம் – முதலமைச்சர் நாயப் சிங் சைனி புகழாரம்!

Next Post

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கவுண்டமணியிடம் ஒப்படைக்கப்பட்ட நிலம்!

Related News

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More

அண்மைச் செய்திகள்

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies