அமெரிக்காவை சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஜான் ஹோப்ஃபீல்ட் மற்றும் பிரிட்டனை சேர்ந்த ஜெஃப்ரி ஹின்டன் ஆகியோருக்கு நிகழாண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நரம்பியல் வலையமைப்புடன் கூடிய இயந்திர கற்றலுக்கான அடிப்படையை கண்டறிந்ததற்காக ஜான் ஹோப்ஃபீல்ட் ஜெஃப்ரி ஹின்டன் ஆகியோருக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நோபல் கமிட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், செயற்கை நரம்பியல் வலையமைப்பு சார்ந்த இயந்திர கற்றலானது அறிவியல், பொறியியல் மற்றும் நமது அன்றாட வாழ்வில் புரட்சியை ஏற்படுத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது.
வரும் டிசம்பர் 10-ஆம் தேதி நார்வேயின் ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், ஜான் ஹோப்ஃபீல்ட் மற்றும் ஜெஃப்ரி ஹின்டனுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ஏற்கனவே மருத்துவத்துக்கான நோபல் பரிசு விக்டர் ஆம்ப்ரோஸ், கேரி ருவ்குன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு அடுத்தடுத்த தினங்களில் அறிவிக்கப்படுகிறது.