பாகிஸ்தானின் கராச்சியில் பெண்களுக்கு எதிராக அத்துமீறல் நடைபெறுவதாக குற்றம்சாட்டிய சிறுமியை இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் பொதுவெளியில் கண்டித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தியாவில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக தப்பியோடிய ஜாகிர் நாயக், தற்போது கராச்சியில் அடைக்கலம் புகுந்துள்ளார்.
அங்கு அவர் உரையாற்றியபோது, சிறுமி ஒருவர் எழுந்து தனது பகுதியில் பெண்களுக்கு பல்வேறு இன்னல்கள் விளைவிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.
இதை ஏற்க மறுத்த ஜாகிர் நாயக், அந்த சிறுமியை கண்டித்ததுடன், அதற்காக மன்னிப்பு கேட்குமாறு கூறியது, இணையத்தில் வைரலாகி சலசலப்பை ஏற்படுத்தியது.