போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சாம்சங் நிறுவன ஊழியர்களின் வாகனம் விபத்தில் சிக்கியது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த எச்சூர் பகுதியில் சாம்சங் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 30 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.
போராட்டத்திற்கு வரும் ஊழியர்கள் சுங்குவார்சத்திரம் அருகே நடந்து வந்தபோது அந்த வழியாக வந்த டாட்டா ஏசி வாகனத்தில் ஏறி சென்றனர். இந்த நிலையில், அந்த வாகனம் சாம்சங் தொழிற்சாலை அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாம்சங் தொழிற்சாலை சுவரில் மோதி விபத்துக்குள்ளானது கவிழ்ந்தது.
இதில் 13 பேர் பலத்த காயம் அடைந்து ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிலர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.