திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கருட வாகன புறப்பாடு கோலாகலமாக நடைபெற்றது.
ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய பிரம்மோற்சவ விழாவில், தினசரி காலை மற்றும் மாலையில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
அந்தவகையில், ஐந்தாவது நாள் பிரம்மோற்சவத்தன்று மோகினி அலங்கார புறப்பாடு நடைபெற்றது. இதனைதொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான கருட வாகன புறப்பாடு நடைபெற்றது.