பின்லேடன் மகன் உமர் பின்லேடன், உடனடியாக பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் புருனே ரீடெய்லியூ தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது : உமர் பின்லேடன், சமூக வலைதளங்கள் வாயிலாக மறைமுகமாக பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.
நாட்டிற்கு ஏற்படும் பின் விளைவுகளை கருத்தில் கொண்டும், தேசிய பாதுகாப்பு நலன்களுக்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதுகுறித்து உமர் பின்லேடன் எந்த விளக்கமும் தர வேண்டியதில்லை என குறிப்பிட்டுள்ளார்.