இம்மானுவேல் சேகரன்தியாகங்களை வணங்கி வீர வணக்கம் செலுத்துவோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது : இந்தியாவின் சுதந்திரத்திற்கு இளம் வயதிலேயே குரல் கொடுத்து, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்று, அடக்குமுறை சமூகத்தால் நிகழ்ந்த அவலங்களை நீக்கிட தனது இராணுவப் பணியை துறந்து பல லட்சியங்களுடன் பாடுபட்ட, மாவீரர் இம்மானுவேல் சேகரனின் பிறந்த தினத்தில், அவரது தியாகங்களை வணங்கி வீர வணக்கம் செலுத்துவோம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.