சாம்சங் தொழிலாளர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட அவசர முறையீட்டை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது.
அப்போது தொழிலாளர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அமைதியான முறையிலேயே தொழிலாளர்கள் போராடி வருவதாக குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்படவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சாம்சங் தொழிலாளர்கள் அமைதியான முறையில் போராட தடையில்லை எனக்கூறி வழக்கை முடித்து வைத்தார்.