நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள துவக்கப் பள்ளியில் உலக தபால் தின விழா கொண்டாடப்பட்டது.
விக்கிரமசிங்கபுரம் டாணா பகுதியில் செயல்படும் தேசிய துவக்கப் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில், உலக தபால் தின விழா கொண்டாடப்பட்டது.
அப்போது மாணவர்களுக்கு அஞ்சலகத்தின் பயன்பாடு மற்றும் அஞ்சலக சேமிப்பின் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.