மகாராஷ்டிர மாநில முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே, திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரத்தில் நாகநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. நவகிரகங்களில் ராகு ஸ்தலமாக விளங்கும் இந்த நாகநாத சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
அந்த வகையில், சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான உத்தவ் தாக்கரேவின் மகனுமான ஆதித்ய தாக்கரே நாகநாத சுவாமி கோயிலுக்கு வருகை தந்தார்.
தொடர்ந்து கோயிலில் உள்ள ராகு பகவானுக்கு பட்டாடை சாத்தி சிறப்பு வழிபாடு நடத்தினார். முன்னதாக மும்பையிலிருந்து தனி விமானத்தின் மூலம் திருச்சிக்கு தனது குடும்பத்தினருடன் வந்தடைந்த உத்தவ் தாக்கரே திருவையாறு, வைத்தீஸ்வரன் கோயில் உள்ளிட்ட ஆலயங்களில் வழிபாடு நடத்தியதாகவும், மகாராஷ்டிரா மாநில தேர்தல் வெற்றி குறித்து வைத்தீஸ்வரன் கோயிலில் ஏடு போட்டு பார்த்ததகவும் தகவல் வெளியாகியுள்ளது.