ஐரோப்பிய யூனியனால் அறிமுகப்படுத்தப்படவுள்ள கார்பன் வரி, இந்தியாவின் ஏற்றுமதியை பாதிக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளில் இறக்குமதி செய்யப்படும் எரிசக்தி சார்ந்த பொருட்களுக்கு கார்பன் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது.
அந்த வகையில் இரும்பு, சிமெண்ட், உரம் உள்ளிட்ட 7 துறைசார் பொருட்களுக்கு வரும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் கார்பன் வரி விதிக்க ஐரோப்பிய யூனியன் முடிவு செய்தது.
இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற எரிசக்தி பரிமாற்ற மாநாட்டில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கார்பன் வரி விதிப்புக்கு ஆட்சேபம் தெரிவித்தார்.
ஐரோப்பிய யூனியன் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்ததாக கூறிய அவர், இதன் மூலம் இந்தியாவின் ஏற்றுமதி தொய்வடையும் என்றும் கவலை தெரிவித்தார்.