ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சியைவிட பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜம்மு-காஷ்மீரில் இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக 64 சதவீத வாக்குகள் பதிவானதை சுட்டிக்காட்டினார்.
அங்கு புதிய உச்சமாக பாஜக 29 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக கூறிய ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரஸ் வெறும் 6 தொகுதிகளில் மட்டுமே வென்றதாக குறிப்பிட்டார்.
ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி அதிக தொகுதிகளில் வென்றாலும், அக்கட்சியைவிட பாஜக கூடுதலாக 3 புள்ளி 5 சதவீத வாக்குகள் பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.