சென்னை, பள்ளிக்கரணையில் அரசு பள்ளியின் முன்பாக நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.
பள்ளிக்கரணை அரசினர் மேல்நிலை பள்ளியின் முன்பாக நடைபெற்று வரும் வடிகால் பணிகளில் எச்சரிக்கை பதாகைகள், தடுப்பு வேலிகள் எதுவுமின்றி காணப்படுவதாகவும், பள்ளிக்கு மிக அருகில் வடிகால் அமைக்கப்படுவதால் துரிதமாக பணியை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.