கரூரில் உள்ள பசுபதீஸ்வரர் கோயிலில் மகா அஷ்டமியை ஒட்டி பூக்குடலை விழா கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பூக்குடலைகள் புடைசூழ பசுபதீஸ்வரர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் பூக்குடலையை குச்சியால் சுமந்தப்படி ஊர்வலமாக சென்று வழிபாடு நடத்தினர்.
நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய வீதி உலா, முக்கிய வீதிகள் வழியாக சென்று கோயிலை அடைந்தது.