பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். அதில், உலக வரைபடத்தில் இந்தியாவை தனது தொலை நோக்குப் பார்வையாலும், ஆர்வத்தாலும் இடம் பிடிக்க வைத்தவர் என தெரிவித்துள்ளார்.
மேலும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை ஊக்கப்படுத்தியவர் எனவும், லட்சக்கணக்கான இளம் தலைமுறையினருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தவர் என்றும் புகழாராம் சூட்டியுள்ளார்.
அத்துடன், அனைவராலும் நேசிக்கப்பட்டும், மதிக்கப்பட்ட மனிதர் எனவும், அப்படிப்பட்ட சிறந்த மனிதருடன் தாம் செலவழித்த ஒவ்வொரு நொடிகளும் போற்றுதலுக்குரியவை என்றும் தமது நினைவுகளை பகிர்ந்துள்ளார். இந்நிலையில், ரத்தன் டாடாவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள ரஜினிகாந்த், இந்தியாவின் உண்மையான மகன் தற்போது நம்முடன் இல்லை என்று பதிவிட்டுள்ளார்.