மத்திய அரசின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றினால் கல்விக்கான நிதி விடுவிக்கப்படும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
வீரத்தாய் குயிலியின் 244 -வது நினைவு தினத்தையொட்டி சிவகங்கையில் அவரது சிலைக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ரயில்வேத்துறை எண்ணற்ற மாற்றங்களை சந்தித்து வருகிறது என்றும் புல்லட் ரயில் இந்தியாவில் இயக்கப்படவுள்ளது என்றும் கூறினார்.
தமிழகத்தில் நடைபெற்ற ரயில் விபத்து குறித்து விசாரனை நடைபெற்று வருகிறது என்றும் விரைவில் அதற்கான காரணம் குறித்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை விடுவித்தது, அதனை தொடர்ந்து மாநிலத்திற்கான பங்கு நிதியை நிதியமைச்சர் அன்மையில் விடுவித்துள்ளார். என்றும் கல்வி குறித்து மத்திய அரசு சில கோரிக்கைகள் வைத்து வருகிறது. அதனை நிறைவேற்றியவுடன் கல்விக்கான நிதி விடுவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலின் துனை முதல்வர் ஆனதால் தமிழக மக்களுக்கு எந்த பலனும் இல்லை என்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு பதவி என்பது தான் உண்மை என்றும் கூறினார்.