கடந்த ஆண்டைப் போல் சென்னையில் கனமழை பெய்தால் சமாளிப்பது கடினம் என, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், வானிலை ஆய்வு மைய அறிவுறுத்தலின்படி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
பருவமழையை எதிர்கொள்ள அனைத்துத்துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். கடந்த ஆண்டைப் போல் சென்னையில் கனமழை பெய்தால் சமாளிப்பது கடினம் என்றும் தெரிவித்தார்.