மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் புரட்டாசி பெருந்திருவிழாவை ஒட்டி திருத்தேர் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.
தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் புரட்டாசி மாத பிரம்மோற்சவ திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை ஒட்டி பெருமாள் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.