வங்கதேச மகாகாளி கோயிலுக்கு பிரதமர் மோடி வழங்கிய கிரீடம் திருட்டு - விசாரணை தீவிரம் - சிறப்பு கட்டுரை!
Nov 16, 2025, 07:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வங்கதேச மகாகாளி கோயிலுக்கு பிரதமர் மோடி வழங்கிய கிரீடம் திருட்டு – விசாரணை தீவிரம் – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Oct 13, 2024, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கதேசத்தின் ஷியாம் நகரில் சத்கிரா மாகாளி ஜெஷோரேஷ்வரி கோயிலுக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்கிய தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளியாலான கிரீடம் திருடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்திய துாதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

வங்க தேசத்தின் தென்மேற்கு சத்கிரா மாவட்டத்தில் உள்ள ஈஸ்வரிபூர் கிராமத்தில் மாகாளி தேவியின் புகழ்பெற்ற ஜெஷோரேஸ்வரி காளி கோயில் உள்ளது.

ஆதி பராசக்தியின் 51 சக்தி பீடங்களில் இக்கோயிலும் ஒன்றாகும். அம்பிகையின் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் விழுந்த புனித தலமாக இந்த ஈஸ்வரிபுரம் உள்ளது. ஆதி பராசக்தி இன்றும் , இத்தலத்தில் ஜெஷோரேஷ்வரியாக வீற்றிருந்து அருள் புரிகிறாள்.

இந்த காளி கோயில், 12 ஆம் நூற்றாண்டில் அனாரி என்னும் அந்தணரால் கட்டப்பட்டதாகும். 100 திருக்கதவுகள் கொண்ட சன்னதியுடன் இந்த காளி கோயில் விளங்குகிறது. பிறகு 13 ஆம் நூற்றாண்டில் லக்ஷ்மண் சென்னால் புனரமைக்கப் பட்ட இந்த கோயில், பிறகு, 16 ஆம் நூற்றாண்டில் ராஜா பிரதிபதியா என்னும் மன்னனால் மீண்டும் கட்டப்பட்டுள்ளது. இந்தக்கோயிலில் , இறைவன் சந்தா என்று அழைக்கப்படுகிறார்.

கொரொனா தொற்று காலத்துக்குப் பின் பிரதமர் மோடி சென்ற முதல் வெளிநாட்டுப் பயணமாக வங்க தேச பயணம் அமைந்திருந்தது. 2021ம் ஆண்டு மார்ச் மாதம் தனது வங்க தேச பயணத்தின் போது பிரதமர் மோடி, இந்த புண்ணிய தலத்துக்குச் சென்று வழிபட்டார். கோவில் தரையில் அமர்ந்து மாகாளியை வணங்கினார்.

பக்தியின் வெளிப்பாடாக, இந்திய கைவினைஞர்களால் மூன்று வாரங்களுக்கு மேல் கையால் செய்யப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி கிரீடத்தை அம்மனுக்குக் காணிக்கையாக பிரதமர் மோடி வழங்கினார்.

மேலும், உள்ளூர் மக்களுக்குப் பயனளிக்கும் விதமாக, கோயிலில் பல்நோக்கு சமுதாயக் கூடம் கட்டுவதற்கான திட்டத்தையும் பிரதமர் மோடி அறிவித்தார். சமூக, மத மற்றும் கல்வி நிகழ்வுகளுக்கான இடமாக இந்த கோயிலைக் கருதிய பிரதமர் மோடி, இயற்கை பேரிடர்களின் போது தங்குமிடமாக செயல் பட்டு, அத்தியாவசிய பாதுகாப்பை இந்த மண்டபம் வழங்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில்ல, பாரம்பரிய சிறப்பு பெற்ற சிறப்பு ஜெஷோரேஷ்வரி கோயிலுக்கு பிரதமர் மோடி வழங்கிய அம்மன் கிரீடம் திருடு போயுள்ளது. கடந்த வியாழக் கிழமை, மதியம் பூஜையை , அன்றைய வழிபாட்டைத் நிறைவேற்றியபின் கோவில் குருக்கள் திலீப் முகர்ஜி கிளம்பிய பிறகு கிரீடம் திருடப்பட்டிருக்கிறது.

ஒருவர் கோயில் சன்னதிக்குள் நுழைந்து காளியின் சிரத்தில் இருந்து கிரீடத்தைத் திருடுவதைக் காட்டும் வீடியோவை, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகமும், அம்மனின் கீரீடத்தைத் கொள்ளை சம்பவத்துக்கு முறையான விசாரணையும், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனையும் வழங்க வங்க தேச அரசை வலியுறுத்தி இருக்கிறது.

போராட்டங்களால், ஷேக் ஹசீனா ஆட்சி முடிவுக்கு வந்துபிறகு வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து உள்ளன. ஏற்கனவே இஸ்கான் கோயில் மற்றும் இந்திய கலாச்சார மையம் உட்பட பல இந்து கோவில்களுக்கு சேதப்படுத்தப்பட்டுள்ளன.

வங்க தேசத்தில் நடக்கும், இந்து சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள்,இந்து கோயில்கள் மற்றும் இந்திய வணிக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களை, அரசு உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், “சட்டம் மற்றும் ஒழுங்கு முறையாக பின்பற்றப்படும் வரை, இந்தியா அக்கறையுடன் கவனித்து வருவதாகவும் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Tags: gold-plated silver crown gifted by modiJessoreshwari Kali TempleBangladeshprime minister modiSatgira Magali Jeshoreshwari Temple i
ShareTweetSendShare
Previous Post

வளர்ச்சி அடைந்த இந்தியா இலக்கை அடைய உறுதுணை புரியும் கதி சக்தி திட்டம் – பிரதமர் மோடி புகழாரம்!

Next Post

சாட்டையை சுழற்றும் பிரதமர் மோடி : சோம்பேறி அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப உத்தரவு – சிறப்பு கட்டுரை!

Related News

பிரச்சார பீரங்கியாக வெடித்த யோகி ஆதித்யநாத் : தண்ணீர் துப்பாக்கியாக மாறிப்போன அகிலேஷ் யாதவ்

வெடித்து சிதறிய ஜம்மு – காஷ்மீர் காவல்நிலையம் : சதிச்செயல் இல்லை உள்துறை அமைச்சகம் திட்டவட்டம்!

தடை விதிக்கப்பட்ட செயலியை பயன்படுத்தியது அம்பலம் : THREEMA APP-ல் திட்டம் தீட்டிய தீவிரவாதிகள்!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

Load More

அண்மைச் செய்திகள்

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

ஓட்டம் பிடித்த சுந்தர்.சி : தெறிக்க விடும் மீம்ஸ்…!

எப்போது நிறைவேறும் அத்திக்கடவு – அவிநாசி திட்டம்? : ஏங்கித் தவிக்கும் விவசாயிகள்!

எட்டிப் பிடிக்க முடியாத தங்கம் : என்னவாகும் பொற்கொல்லர்களின் எதிர்காலம்?

மினிமம் பட்ஜெட்….மிடில் கிளாஸ் ஃபேமிலி : மனதை கவர்ந்த மக்கள் இயக்குனர்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

முகவரி மாற்றி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய தவெக தலைவர் விஜய்!

அரசியலில் இருந்து விலகுகிறேன் – லாலு மகள் ரோகிணி ஆச்சார்யா அறிவிப்பு!

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு – பாறைகளில் ஏறி பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies