வரும் 2047-ம் ஆண்டில் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் விக்சித் பாரத் திட்டத்தை நிறைவேற்ற இந்தியாவுக்கு வேகம் சேர்க்கும் கதி சக்தி திட்டத்துக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக கடந்த 2021-ம் ஆண்டு கதி சக்தி திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், அத்திட்டம் இன்றுடன் 3 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதனை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மத்திய அரசு, கதி சக்தி எனும் அற்புதமான முன்முயற்சியால் இந்தியாவின் உட்கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
மேலும், கதி சக்தி திட்டம் பொருளாதார வளர்ச்சியை உந்துவதுடன், வளர்ச்சியின் எதிர்காலத்தை வடிவமைப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.