பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு மிக சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள கலந்தாய்வு கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பருவமழை காலங்களில் ஏற்படும் பிரச்னைகள் தொடர்பாக புகார் அளிக்க, தமிழக அரசு ‘தமிழ்நாடு அலர்ட்’ என்ற புதிய செயலி ஒன்றை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், பொதுமக்கள் 1913 என்ற அவசர உதவி எண்ணிலும், சமூக வலைதள பக்கங்களிலும், நம்ம சென்னை தளத்திலும் கூட புகார்களை பதிவு செய்யலாம் எனவும் அவர் குறிப்பிட்டார். அதேபோல கூடுதலாக மின்வாரிய ஊழியர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், பருவமழையை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளதாக தெரிவித்தார்.