முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை சுட ஒரு மாதம் ஒத்திகை : கொலையாளிகள் பகீர் வாக்குமூலம் - சிறப்பு கட்டுரை!
Oct 26, 2025, 07:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை சுட ஒரு மாதம் ஒத்திகை : கொலையாளிகள் பகீர் வாக்குமூலம் – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Oct 13, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் சுட்டு படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்ய ஒரு மாதம் ஒத்திகை நடந்ததாக வெளியான பகீர் தகவல் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்.

மகாராஷ்டிராவில் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் பாபா சித்திக். அம்மாநில முன்னாள் அமைச்சரான இவர், மும்பை நிர்மல் நகரில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து காரில் அமர்ந்தார்.

அப்போது அவரது காரை சுற்றி பட்டாசுகளை வெடிக்க செய்த மர்ம கும்பல், காரில் இருந்த சித்திக் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 தோட்டாக்கள் அவர் மீது பாய்ந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாபா சித்திக்கை காப்பாற்ற மருத்துவர்கள் மிகவும் போராடியபோதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்த கொலை தொடர்பாக ஹரியானாவைச் சேர்ந்த கர்னல் சிங், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தர்மராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். குடிசை மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான பிரச்னையில் பாபா சித்திக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

ஆனால் பாபா சித்திக் கொலைக்கு டெல்லியைச் சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க் பொறுப்பேற்றுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள கர்னல் சிங் ஹரியானாவைச் சேர்ந்தவர். தர்மராஜ் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர். பாபா சித்திக் சம்பவ இடத்திற்கு வருவது குறித்து கொலையாளிகளுக்கு யாரோ தகவல் கொடுத்திருக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், கொலைக்கு முன், ஒரு மாதம் ஒத்திகையில் ஈடுபட்டதும், அவர்கள் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதற்காக தலா 50 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும் பகீர் வாக்குமூலத்தை அவர் கொடுத்துள்ளனர்.

பாபா சித்திக் நடிகர் சல்மான் கானுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். லாரன்ஸ் பிஷ்னோய் நடிகர் சல்மான் கானுக்கு ஓராண்டிற்கும் மேலாக தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்.

சல்மான் கானுக்கு யாரெல்லாம் நெருக்கமானவர்களோ அவர்கள் தங்களுக்கு எதிரி என்று லாரன்ஸ் பிஷ்னோயிக்கு மிகவும் நெருக்கமான ரோஹித் கோதாரா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

தற்போது லாரன்ஸ் பிஷ்னோய் குஜராத் சிறையில் உள்ளார். ஆனாலும் லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது சகோதரர் அன்மோல் பிஷ்னோய் தொடர்ந்து தங்களது அடியாட்கள் மூலம் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தில் 700 அடியாட்கள் இருக்கின்றனர். அவர்களது செயல்பாடுகள் பஞ்சாப், ஹரியானா போன்ற வடமாநிலங்களில்தான் அதிகம்.

Tags: Baba Siddiqui murdercasemumbaiMaharastraNirmal Nagarformer minister Baba Siddiqui
ShareTweetSendShare
Previous Post

உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள் – கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் 8 கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்!

Next Post

திருப்பதி கோயில் பிரம்மோற்சவ விழா – 8 நாட்களில் 30 லட்சம் லட்டுகள் விற்பனை!

Related News

ஈரோட்டில் அரசு கூட்டுறவு வங்கியில் 80 சவரன் நகைகள் கையாடல் – ஊழியர் தலைமறைவு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் – சென்னையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா திரும்பப்பெறப்படுகிறது – அமைச்சர் கோவி.செழியன்

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

Load More

அண்மைச் செய்திகள்

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies