டெல்லியில் ஆஸ்திரேலிய பாதுகாப்பு துறை அமைச்சர் கிரெக் மொரியார்ட்டியுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்தியா, ஆஸ்திரேலியா பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தியதாக எக்ஸ் பக்கத்தில் ராஜ்நாத் சிங் பதிவு செய்துள்ளார்.
முன்னதாக தேசிய போர் நினைவிடத்தில் ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் கிரெக் மொரியார்ட்டி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.