காஞ்சிபுரத்தில் அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்த இளைஞர் தூக்கிவீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரத்தில் கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பூக்கடை சத்திரம் பகுதியை சேர்ந்த திலீப் குமார் என்பவரின் வீட்டினருகே மின்கம்பி ஒன்று அறுந்து கிடந்துள்ளது. இதனை கவனிக்காத அவர் மின்கம்பியை மிதித்ததால் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திலீப்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.