கனமழை காரணமாக சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை முழுவதும் மிக கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தின் எஸ்பிளனேடு வாயில்களில் மழை நீர் வெள்ள போல் ஓடியது.
இதில் பொதுமக்களும், வழக்கறிஞர்களும் மிகுந்த சிரமத்துடன் நீதிமன்றத்திற்கு செல்ல நேர்ந்தது. உடனடியாக மாநகரட்சி, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அங்கிருந்த மழை நீர் முற்றிலும் அகற்றப்பட்டது. இந்நிலையில் க னமழை காரணமாக சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நாளை விடுமுறை அறிவித்து பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.