கொரோனா ஊரடங்கின் போது இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு வரி வசூலிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா காலக்கட்டத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது
பின்னர் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்ட பிறகும், மக்கள் ஆம்னி பேருந்துகளில் பயணிக்க ஆர்வம் காட்டாததால் 5 காலாண்டுகளுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படவில்லை
இருப்பினும் ஆம்னி பேருந்துகளுக்கு சாலைவரி செலுத்த தமிழக ஆரசு உத்தரவு பிறப்பித்ததால் இதனை எதிர்த்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், கொரோனா காலத்தில் ஆம்னி பேருந்து பொது சாலையில் இயக்கப்படவில்லை என்பதால் வரி வசூலிக்க முடியாது என தீர்ப்பு வழங்கினார்.