இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மைய தேசிய தூதராக நடிகை ராஷ்மிகா மந்தனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ராஷ்மிகா இடம்பெற்ற DEEP FAKE வீடியோவொன்று வெளியானது.
ஆனால், அதை துணிச்சலாக கையாண்டார் ராஷ்மிகா. இந்த நிலையில், ராஷ்மிகாவை இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மைய தேசிய தூதராக நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.